தேவையானவை : v வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி - அரை கப் v துருவிய பனீர் - அரை கப் v வேகவைத்து மசித்த உருளைகிழங்கு - 2 v பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப் v பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன் v இஞ்சி விழுது - அரை டீஸ்பூன் v பால் - ஒரு டேபிள்ஸ்பூன் v ஓட்ஸ் - கால் கப் v எண்ணெய் , உப்பு - தேவையான அளவு செய்முறை : ஓட்ஸை வெறும் வாணலியில் பச்சை வாசனை போகும் வரை வறுத்துக் கொள்ளவும். ஒர் அகலமான பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி , பனீர் , கொத்தமல்லித்தழை , இஞ்சி விழுது , பச்சை மிளகாய் விழுது , ஓட்ஸ் , உப்பு எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்துகொள்ளவும். பிறகு பாலை சேர்த்து பிசைந்து விருப்பப்பட்ட வடிவங்களில் பிடித்து, தவாவில் எண்ணெய் விட்டு , சுட்டு எடுக்கவும்.
தேவையான பொருட்கள் : Ø மைதா - ஒரு கப் Ø வெண்ணெய் - ஒரு டீஸ்பூன் Ø தயிர் - 2 டீஸ்பூன் Ø பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் Ø பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன் Ø கொத்தமல்லித்தழை - சிறிதளவு Ø உப்பு - தேவையான அளவு செய்முறை : Ø ஒரு கிண்ணத்தில் மைதா , உப்பு , பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலக்கவும். Ø இதனுடன் உருக்கிய வெண்ணெய் , தயிர் , பூண்டு விழுது , கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். Ø ஊறிய மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி , நீளமான சப்பாத்தி போல தேய்த்துக்கொள்ளவும். Ø தவாவை சூடாக்கி பிறகு சிம்மில் வைத்துக் கொள்ளவும். தவாவில் படும் நாண் பகுதியை சுட்டு எடுப்பதற்கு முன் அதன்மீது சிறிது தண்ணீரை தொட்டு தடவிக்கொள்ளவும். Ø பின் தண்ணீர் தடவிய பகுதியை தவாவில் படும்படி போட்டு 5 நிமிடம் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். Ø எடுத்த பின் எண்ணெய் தடவி பரிமாறவும்.