Skip to main content

மணத்தக்காளி வற்றல் குழம்பு


மணத்தக்காளி வற்றலை வைத்து குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை: 

  1. மணத்தக்காளி வற்றல் - 4 டீஸ்பூன், 
  2. புளி - எலுமிச்சைப் பழ அளவு, 
  3. வெந்தயம், 
  4. கடலைப்பருப்பு, 
  5. கடுகு - தலா அரை டீஸ்பூன், 
  6. காய்ந்த மிளகாய் - 2, 
  7. பெருங்காயத்தூள் - சிறிதளவு, 
  8. சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், 
  9. கறிவேப்பிலை - சிறிதளவு,
  10.  எண்ணெய் - 50 மில்லி, 
  11. உப்பு - தேவையான அளவு.


செய்முறை: 

* புளியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின் மணத்தக்காளி வற்றலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் சாம்பார் பொடி சேர்த்துக் கிளறவும். 

* அடுத்து இதில் புளிக்கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.


* குழம்பு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

குறிப்பு:

மணத்தக்காளி காய், கீரை இரண்டும் வயிற்றுப்புண்ணை ஆறவைக்கும்.

Comments