தேவையான பொருட்கள் -
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட் - 1
பச்சை பட்டாணி - 50 கிராம்
காலிபிளவர் - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி பொடி - 1 மேஜைக்கரண்டி
சீரக தூள் - 1 மேஜைக்கரண்டி
மிளகாய் பொடி - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா பொடி - 1 மேஜைக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
அரைக்க -
தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
சோம்பு - 1 மேஜைக்கரண்டி
முந்திரி பருப்பு - 6
செய்முறை -
- வெங்காயம், தக்காளி, கேரட், காலிபிளவர் எல்லாவற்றையும் பொடிதாக வெட்டி வைக்கவும்.
- அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து கிளறவும். அதனுடன் உப்பு, மிளகாய் பொடி, மல்லிப்பொடி, சீரகப்பொடி, மஞ்சள்பொடி சேர்த்து கிளறவும்.
- பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- காய்கறிகள் நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் கரம் மசாலா சேர்க்கவும். தேவைபட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- எல்லாம் நன்கு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான வெஜ் குருமா ரெடி. சப்பாத்தி, பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
Comments
Post a Comment