Skip to main content

காளான் பிரியாணி



தேவையான பொருட்கள்:


  • காளான் - 1/2 கிலோ
  • பாசுமதி அரிசி - 2 கப்
  • வெங்காயம் - 1 நறுக்கியது
  • தக்காளி - 2 நறுக்கியது
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி - 1/4 கப் 
  • புதினா - 1/4 கப்
  • பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
  • எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  • நெய் - 3 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் பால் - 1/2 கப் 
  • தயிர் - சிறிதளவு
  • மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
  • சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  • தண்ணீர் - 3 கப்
  • உப்பு - தேவையான அளவு


தாளிக்க:

பிரியாணி இலை, ஏலக்காய், லவங்கம், கிராம்பு அனைத்தும் தேவைக்கேற்ப.

செய்முறை:

  • முதலில் காளானை கழுவி சிறியதுண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 
  • அதே சமயம், அரிசியை நீரில் ஊற  வைக்கவேண்டும். 
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய்,  லவங்கம் ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும். 
  • பிறகு அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து வதக்க வேண்டும். 
  • பின் இஞ்சி, பூண்டு  விழுது மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். 
  • தக்காளி நன்கு வதங்கியதும், காளானை போட்டு பிரட்டி, மஞ்சள் தூள், மல்லி தூள், சோம்பு தூள், தயிர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கிரேவி போன்று வரும்வரை கொதிக்க வைக்க வேண்டும். 
  • அதே சமயம் குக்கரை மற்றொரு அடுப்பில்  வைத்து அதில் அரிசியைக் கழுவி போட்டு, அந்த கிரேவியை ஊற்றி, 3 கப் தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி 1 விசில் வைத்து  10 நிமிடங்கள் அப்படியே சிறிய தீயில் வைத்து இறக்கவும். 
  • சிவையான காளான் பிரியாணி தயார்.


Comments